தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. .ப.சிதம்பரம்
நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை, மார்ச்-18

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமாக ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
”ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த்தொற்றின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது குறித்து யாரேனும் சிந்திக்கிறீர்களா?. 5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கொரோனா தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன். தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு மத்தியிலுள்ள போட்டியில் கரோனாதான் மக்களை வெல்கிறது.
மக்களுக்கு தேவைக்கேற்ப கொரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டும். கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு போன்ற அதிகாரத்துவ தடைகளை விலக்க வேண்டும்”
என்று குறிப்பிட்டுள்ளார்.