அ.ம.மு.க. பொதுக்குழு 25ந்தேதி கூடுகிறது.. டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பிப்-22

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகி கடந்த 9ஆம் தேதி சென்னை வந்தார். தற்போது தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் அமமுக பொதுக்குழு கூட்டம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25ஆம் தேதி காலை 9 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவித்துள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.