அண்ணாவின் ஆட்சியை 3 மாதங்களில் அமைப்போம்.. ஸ்டாலின் உறுதி
சென்னை, பிப்-3

பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளையொட்டி சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
மொழி, இனம், நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம் என உறுதியேற்கிறோம் என கூறினார்.
தந்தை பெரியாரின் தனயன் –
முத்தமிழறிஞர் கலைஞரின்,
தாய்த்தமிழ்நாட்டின் அண்ணன் – பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று!
அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?
மொழி – இனம் – நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட #அண்ணா-வின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்! உறுதியேற்கிறோம் இன்று!
என குறிப்பிட்டுள்ளார்.