இந்தியாவில் ஒரே நாளில் 13,203 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,203 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, ஜன-25

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,67,736 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 131 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,470 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,03,30,084 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 13,298 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 96.83 சதவீதமாக உள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,84,182 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் 16,15,504 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.