கங்குலியின் இதயத்தில் 2 அடைப்புகள்.. 24 மணி நேரம் மருத்துக்கண்காணிப்பு
இந்திய அணியின் பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தா, ஜன-2

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலி (வயது 48). கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் கங்குலியை பரிசோதனை செய்ததில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சவுரவ் கங்குலிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர். அஃப்தாப் கான் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டாக்டர் கூறியதாவது:-
சவுரவ் கங்குலிக்கு இதயநாள அடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கங்குலியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் அடுத்த 24 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்.அவர் முழு நினைவுடன் உள்ளார். கங்குலியின் இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்காக தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.