அதிநவீன உபகரணங்களுடன் வந்திறங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழு…
திருச்சி, அக்டோபர்-26
திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் இணைந்தது.
திருச்சி அருகே மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. சுமார் 18 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பிறகு 70 அடி ஆழத்தில் சென்றதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
குழாயில் மண் சரிந்து மூடப்பட்டதால் மேலும் சிக்கல் உண்டானது. இடுக்கி போன்ற கருவிகளை வைத்து மண் அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குழந்தையை மீட்க கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் வந்தனர். மாநில பேரிடர் மீட்பு படையை தொடர்ந்து அதிநவீன உபகரணங்களுடன் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையும் வந்தது. இந்த இரண்டு படை வீரர்களும் இணைந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.