இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.37 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 88.47 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி, நவ-30

நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டியது. மொத்த பாதிப்பு 94,31,692ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 443 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,37,139 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,47,600 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 45,333 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,46,952 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.81 சதவீதமாகவும் உள்ளது.