திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மாகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை, நவ-29

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 4 மணிக்கு கோவில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை சிவாச்சாரியா்கள் கைகளில் சுமந்தபடி கோவில் 2, 3-ஆம் பிரகாரங்கள் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து, மகா தீபமும் ஏற்றப்பட்டது.
இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆட்சியர் சந்தீப் நந்தீரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டர்.
திருண்ணாமலை நகர பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும், நாளையும் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.