வரும் 23-ல் கூடுகிறது, திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 23ம்தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை, நவ-16

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 23-11-2020 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணியை இறுதி செய்வது பற்றியும் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களுடன் ஸ்டாலின் விவாதிப்பார் எனத் தெரிகிறது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் நிதி, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.