நீர்நிலைகளை சீரமைத்து சீர்மிகு நகரமைப்போம்.. – அமைச்சர் S.P.வேலுமணி
சென்னை, நவ-12

தமிழகம் முழுவதும் விவசாய பணிகள் சிறக்க குடிமராமத்துபணிகள் நடைபெற்ற நிலையில் தலைநகரான சென்னையில் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் ஏரிகள்,குளங்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டம் மற்றும் ,மாநகராட்சி சார்பில் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 15 மண்டலங்களிலும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 21 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புடன் 31 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. ,மாநகராட்சியால் 117 சமுதாய கிணறுகளும், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்றுவாரியத்தின் சார்பில் 174 சமுதாய கிணறுகளும் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலவ்ர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். சென்னையில் மொத்தம் 291 சமுதாய கிணறுகள் மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
இதைத்தொடரந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,தமது சமூக வலைதளப்பக்கங்களில், நீர்நிலைகளை சீரமைத்து சீர்மிகு நகரமைப்போம் என்ற முழக்கத்துடன், இந்த பருவகாலத்தில், மழை நீரை சேமித்து, அரசின் முயற்சிகளுக்கு மக்களும் தோள் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சென்னையில் வீடுகள் அரசு கட்டிங்கள் மட்டுமின்றி பருவமழை காலத்தில் மழை நீரை சேமிக்கும் கட்டமைப்புடன் சென்னை மாநகராட்சியால் புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் பற்றிய தகவல்களை விளக்கும் படங்களுடன் தினமும் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்..
நம்மில் ஒருவர் நமக்கான முதல்வர் அண்ணன் எடப்பாடியாரின் ஆட்சியில் சென்னையில் புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் என்று அவர் தினமும் சென்னை மாநகராட்சியால் புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் பற்றி பதிவு செய்து வருகிறார்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1200 மிமீட்டர் (1.2 மீ) மழை பெய்கிறது.இதில் மூன்றில் இரண்டு பங்கு ( 800 மிமீ) மூன்று மாதங்கள் அதாவது அக்டோபர்,நவம்பர்,டிசம்பரில் பருவமழை மூலம் கிடைக்கிறது. பருவகாலத்தில் பெய்யும் மழை நீரை சேமித்தால்,நீர்பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று அறிவுறுத்திவரும் சென்னை மாநகராட்சி, மழை நீர் சேமிப்பால் மண்வளம்,நிலத்தடி நீர்வளத்தை பெருக்குவது மட்டுமின்றி மழை நீர் கடலில் கலப்பதை தடுக்கமுடியும் என்று தெரிவித்துள்ளது.


சென்னையில் உள்ள 12 லட்சம் வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் இருந்து சேகரிக்கப்படும் 75 சதவீத மழை நீர் மூலம் ஆண்டுக்கு 56 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் மழை நீரை சேமிப்பை அனைத்து வீடுகளிலும் பின்பற்றி அடுத்து வருகிற கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை வெல்வோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி வருகிறார்.
