மம்தாவுக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அமித்ஷா பேச்சு
மம்தாவுக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், பா.ஜனதா மேற்கு வங்கத்தில் அடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
கொல்கத்தா, நவ-5

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்காள மாநிலம் பங்குராவில் பா.ஜனதா மூத்த தலைவர் பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
அதிக பெரும்பான்மையுடன் மேற்கு வங்காளத்தில் அடுத்த அரசை பா.ஜனதா அமைக்கும். மத்திய திட்டங்களின் நன்மைகள் ஏழைகளுக்குச் செல்வதைத் தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி தடைகளை உருவாக்கி வருகிறார். மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கடுமையான கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. நரேந்திர மோடியின் தலைமையில் மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். மோடியின் தலைமையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத வகையில் பாஜக தொண்டர்கள் மீது மம்தா பானர்ஜி அரசு ஒடுக்குமுறையை தொடங்கி உள்ளது. பா.ஜனதா தொண்டர்கள் தாக்கி கொலை செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.