நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.! மத்திய அரசு அறிவிப்பு..!!
நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 6 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வு விதிமுறைகள் தொடரும் என்றும் அதேநேரத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி, அக்-27

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கத்தின் 9ஆம் கட்டம் வருகிற 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தளர்வுகளூடன் பொது முடக்கத்தை வருகிற நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதன்படி, கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் நவம்வர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய உள்துறை வெளியிட்ட கட்டுப்பாடுகள், நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நாடு முழுவதும் அன்லாக் செயல்முறை தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அன்லாக் 6.0 தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட தளர்வுகளான, மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்து, பயிற்சிகளுக்கான நீச்சல் குளங்களை திறந்து கொள்ளலாம், 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி உள்ளிடவைகள் கட்டுப்பாடுகளுடன் தொடரும் என அறிவித்துள்ள மத்திய அரசு, நிலைமைக்கு தகுந்தவாறு கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணிதல், 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.