அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, அக்-26

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.