எல்.முருகன் இருக்கும்வரை தமிழகத்தில் பாஜக வளராது, தாமரையும் மலராது..டி.கே.எஸ் இளங்கோவன்
முருகன் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது என்று திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
சென்னை, அக்-14

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மக்கள் புகார்கள், தேவைகளை ஆராய்ந்து அறிக்கைகளை தயார் செய்ய அந்த குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக எல்.முருகன் கூறுகையில்;- திமுக தேர்தல் அறிக்கை கடந்த சட்டப்பேரவை தேர்தலை போன்று வரும் தேர்தலிலும் ஜீரோவாகத்தான் இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், ‘முருகன் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது; தாமரையும் மலராது’ என்று பதிலளித்தார்.