கோவையில் பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்..!
கோவை, அக்-14

கோவை தொண்டாமுத்தூர் அருகே பூலுவப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆற்றுப்படுகைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் புதியதாக சாலைகள் அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பேரூர் பகுதியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு பெட்டகத்தை வழங்கினார்.
தொடர்ந்து ஆலந்துறை பகுதியில் 67 லட்சம் மதிப்பில் கோவை சிறுவாணி செல்லும் சாலை முதல் நரசிபுரம் சாலை வரை தடுப்புச்சுவர் அமைக்கும் மேம்பாடு செய்யவும் பணிகளுக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்தார். மேலும், தொண்டாமுத்தூர் நரசிபுரம் சாலை மேம்பாடு செய்யும் பணி & அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க நிதி ஒதுக்கி, கட்டிடம் கட்டும் பணியை பூமி பூஜையுடன் துவங்கி வைத்தார்.
தொடர்ந்து கோவை பூலுவம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனத்தை 19 பேருக்கு வழங்கினார். மேலும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி செம்மேடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீரும், நோய்த்தொற்றை தடுக்க மருந்துகள் தொகுப்பையும் வழங்கினார்.