விஜயகாந்த், மனைவி பிரேமலதா இருவரும்இன்று டிஸ்சார்ஜ்..மருத்துவமனை அறிக்கை.!!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இருவரும் இன்று வீடு திரும்புவார்கள் என மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை, அக்-2

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த மாதம் 22-ம் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமாக உடல் பரிசோதனை செய்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து, விஜயகாந்த் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன், மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் மீண்டும் பரிசோதனை செய்தனர். அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உடனடியாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு.விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளருமான திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர். இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தன்மூலம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
