இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.95480 கோடி ஜிஎஸ்டி வசூல்..!
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 95 ஆயிரத்து 480 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் கூறி உள்ளது.
டெல்லி, அக்-1

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழில்துறை முடங்கியதால் மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறையத் தொடங்கியது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், வரி வருவாயும் சற்று உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் மாதத்தில் 95,480 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.17,741 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.23,131 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.47,484 கோடி அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.