பொருளாதார சீரழிவை மறக்கடிக்க முடியாது ..ராகுல்காந்தி
பொருளாதார சீரழிவை மறக்கடிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கூறியுள்ளார். பல மாதங்களாக நான் எச்சரிக்கை விடுத்து வந்ததை ரிசர்வ் வங்கி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. தொழிலதிபர்களுக்கு வரியை ரத்து செய்வதை விடுத்து ஏழை மக்களுக்கு பணத்தை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-26

பொருளாதாரத்தை மீடடெடுக்க நீண்ட காலம் ஆகும். ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பல மாதங்களுக்கு முன் நான் எச்சரித்தது என்னவோ? அதை இன்று ஆர்பிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அதிகமாக செலவு செய்யுங்கள், கடன் கொடுக்காதீர்கள். ஏழைகளுக்கு பணம் கொடுங்கள். தொழிலதிபர்களுக்கு வரி குறைப்பு செய்யாதீர்கள். நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யுங்கள். மீடியா மூலம் திசைதிருப்புவதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவ முடியாது அல்லது பொருளாதார சீரழிவை மறைத்துவிட முடியாது’’ எனப் பதிவிட்டுள்ளார்.