என் நண்பனை இழந்து தவிக்கிறேன்.. அருண் ஜெட்லி நினைவு தினத்தில் பிரதமர் மோடி உருக்கமான பதிவு..!
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு தினமான இன்று ”என்னுடைய நண்பனை பெரிதும் நான் இழந்து தவிக்கிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-24

மத்திய அமைச்சராகவும், பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் இருந்த அருண் ஜெட்லி உடல்நலக் கோளாறு காரணமாக தனது 66-வது வயதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி காலமானார். இந்த நிலையில் அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் அவரை நினைவுகூர்ந்து உருக்குமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு இதே நாளில், நாம் அருண் ஜெட்லியை இழந்துவிட்டோம். என்னுடைய நண்பனை பெரிதும் நான் இழந்து தவிக்கிறேன். இந்தியாவுக்காக விடாமுயற்சியுடன், இரவு பகலாக நாட்டுக்குத் தொண்டாற்றியவர். அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், சட்ட வல்லுநத்துவம், அன்பான ஆளுமையுடன் ஜெட்லி திகழ்ந்தவர்” எனத் தெரிவித்தார்.