வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு செய்கிறார்.
வேலூர், ஆகஸ்ட்-20

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தபின் விவசாயிகள், தொழில்துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை செய்கிறார்.
கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்துள்ளார்.
இன்று பிற்பகலில் தர்மபுரியில் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு பற்றியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.