எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு.. ப.சிதம்பரம் ட்வீட்
அச்சம், வறுமை, அடக்குமுறையிலிருந்து விடுதலை என்பதே சுதந்திரம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-15

74வது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 7வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை. எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள், என கூறியுள்ளார்.