இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் – 14

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன். எளிய மக்களுக்கு அதற்கு விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது. எனவே இப்போதும் அம்முறையை முழுமையாக அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன். அதேநேரத்தில் இத்தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்!
என அவர் கூறியுள்ளார்.