பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி.. தரம் தாழ்ந்த செயல் என மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!
கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தயுள்ளார். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை, ஜூலை-30

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது ;-
கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம்!
தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்!
குற்றவாளிகளைக் கைது செய்க!