31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவு.. ஆட்சியர்களுடன் நாளை மறுநாள் முதல்வர் முக்கிய ஆலோசனை..!
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்துகிறாா்.
சென்னை, ஜூலை-27

கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்காக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறாா். அப்போது, இந்த பொது முடக்கத்தை நீட்டிப்பதா, தளா்வுகளை அளிப்பதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி விவாதிப்பாா் எனத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் மருத்துவ நிபுணா்வுகள் குழுவுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.