உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6,42,751 ஆக அதிகரிப்பு
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,59,41,806 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,42,751 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை-25

உலக அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், கொரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் 213 நாடுகளுக்கு மேல் பரவி முடக்கிப்போட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது.
உலக அளவில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 10,361 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,59,41,806 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 866 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6,42,751 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 97,24,289 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 55,74,766 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 66,247 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா: 42,48,327, பிரேசில்: 23,48,200,
இந்தியா: 13,37,022, ரஷியா: 8,00,849..