தங்கம் விலை ரூ. 38,000-ஐ கடந்தது..! வரலாறு காணாத உயர்வால் மக்கள் அதிர்ச்சி..!
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.544 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.
சென்னை, ஜூலை-22

கொரோனா காலத்திலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,736ரூபாயாக இருந்த நிலையில் இன்று 544 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.
மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.