கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார், அமைச்சர் செல்லூர் ராஜூ..!
கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
சென்னை, ஜூலை-17

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கடந்த ஜூலை 8 ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இருமுறை அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் இருமுறையும் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.