இந்தியாவில் 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கியது..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,36,181 லிருந்து 9,68,876-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,309-லிருந்து 24,915-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி, ஜூலை-16

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இறப்பு, குணமடைந்தோர் நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இதுவரை 9,68,876 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 606 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்துள்ளது. உயரிழப்பு விகிதம் 2.6 சதவீதமாக உள்ளது.
இதுவரை 6,12,815 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,31,146 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 275640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 152613 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10928 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 151820 பேருக்கும், டெல்லியில் 116993 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.