கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்தார், மு.க.ஸ்டாலின்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, ஜூலை-8

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது. மேலும், அவரது மகன் தரணிதரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அமைச்சர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.