மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா உறுதி..!
கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை, ஜூலை-5

கோவை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 275 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்,கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகள், மருமகன், பேத்திக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியான நிலையில் தற்போது அர்ச்சுனனுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அறிவித்தது. அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி, மகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதும் உறுதியானது. தற்போது அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.