துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பிக்கு கொரோனா..!
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன்-29

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதுவரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மதுரையில் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஒ.ராஜாவுக்கு கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவ வட்டார தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த ஸ்ரீபெரும்பத்தூர் எம்எல்ஏ பழனி, அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் அண்மை காலமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்ட ஆவின் தலைவரும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ. ராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஓ. ராஜாவின் குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில், அவரது 62 வயது மனைவி மற்றும் உறவினர்கள் இருவருக்கு தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.