இங்கிலாந்து எம்.பிக்களுடன் எடப்பாடியார் சந்திப்பு
லண்டன் ஆகஸ்ட் 30
லண்டனில் இங்கிலாந்து நாட்டு எம்.பிக்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறோம். ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 107 நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியும்.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பது மருத்துவமனைகளிலே உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.