10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை ஜூன் மாத இறுதிக்கு பிறகு அறிவிக்க முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்
ஜூன் மாத இறுதிக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்க முடிவு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை, மே-8

கொரோனா பரவால் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டநிலையில், 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்த முடியாமல் போனது.
கொரோனா அதிவேகமாக பரவி வருவதால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவியது.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செங்கோட்டையன், ”10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.