கஞ்சா போதையில் திளைத்த காலம் – பாக்யராஜ் நினைவலைகள்
சென்னை ஆக 24
கஞ்சா போதையில் திளைத்த தமது இளமைக்காலம் பற்றி இயக்குனர் பாக்யராஜ் வெளிப்படையாக பேசினார்.

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலா’. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் , கோவையில் இருந்த காலத்தில்“நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்புத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லா வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ருனு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன். வாழ்க்கையில்என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே, ஆனால் இப்படி இருக்கோமே என்று, அன்று தான் தோன்றியது. புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். இவ்வாறு பாக்யராஜ் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.