டெல்லி வன்முறை: காங்கிரஸ் அமைதி பேரணி
டெல்லி, பிப்ரவரி-26
டெல்லியில் தொடரும் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்கு பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் நிலவும் வன்முறைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பேரணி இன்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். தொண்டர்களுடன் அவர் பேரணியில் நடந்து சென்றார். ஜந்தர் மந்தர் பகுதியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
